Breaking

Monday, March 16, 2026

பகுதி நேரமாக பிஎச்டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் தானா?


பகுதி நேர​மாக பிஎச்டி முடித்​தவர்​கள் கல்​லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகு​தி​யானவர்​கள்​தானா என்​பது தொடர்​பாக, உயர் ​கல்​வித் துறை புதிய அரசாணை வெளி​யிட வேண்​டும் என்று, அரசு கல்​லூரி ஆசிரியர் சங்​கம் வலி​யுறுத்​தி​யுள்​ளது.

இதுதொடர்​பாக, தமிழ்​நாடு அரசு கல்​லூரி ஆசிரியர் சங்க பொதுச் செய​லா​ளர் சோ.சுரேஷ் வெளி​யிட்​டுள்ள செய்​திக் ​குறிப்பு: கடந்த மார்ச் 13-ம் தேதி உயர்​கல்​வித் துறை​ வெளி​யிட்ட அரசாணை​யில் (எண் 40) பகு​திநேர முனை​வர் பட்​டம் (பிஎச்​டி) பெற்​றவர்​கள் உதவிப் பேராசிரியர் பணிக்கு தகு​தி​யானவர்​களாகக் கருதப்​பட​வில்லை என குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

இந்த அரசாணை மீதான ஆட்​சேபத்தை அரசு கல்​லூரி ஆசிரியர் சங்​கம் தெரி​வித்​திருந்​தது. இந்​நிலை​யில், உயர்​கல்​வித் துறை அதி​காரி​களிடம் விளக்​கம் கேட்​ட​போது, பகுதி நேர முனை​வர் பட்​டம் பெற்​றவர்​கள் உதவிப் பேராசிரியர்​கள் பணிக்கு தகு​தி​யானவர்​கள்​தான் என உறு​தி​யாக தெரி​வித்​தனர்.

எனவே, ஏற்​கனவே வெளி​யிடப்​பட்ட அரசாணை​யில் உரிய மாற்​றம் செய்து புதிய அரசாணை வெளி​யிட​வேண்டும். உரிய நேரத்​தில் விளக்​கம் அளித்து உதவிப் பேராசிரியர் தேர்​வர்​களிடையே ஏற்​பட்​டிருந்த பதற்​றத்தை தணித்த உயர்​கல்​வித் துறை அதி​காரி​களுக்கு நன்​றியைத் தெரி​வித்​துக்​கொள்​கிறோம். இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்​.

No comments:

Post a Comment