Thamizhkadal WhatsApp Channel

பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு எளிது: ‘சென்டம்’ அதிகரிக்க வாய்ப்பு

பத்​தாம் வகுப்பு அறி​வியல் தேர்வு எளி​தாக இருந்​த​தால், முழு மதிப்​பெண் பெறும் மாணவர்​களின் எண்​ணிக்கை அதி​கரிக்​கும் என்று ஆசிரியர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

தமிழக பள்​ளிக்​கல்வி பாடத் திட்​டத்​தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 11-ம் தேதி தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. இதில், அறி​வியல் பாடத் தேர்வு நேற்று நடை​பெற்​றது. மாநிலம் முழு​வதும் 4,219 மையங்​களில் சுமார் 8.80 லட்​சம் மாணவர்​கள் எழு​தினர். தேர்வு எளி​தாக இருந்​த​தால் மாணவர்​கள் மகிழ்ச்சி அடைந்​தனர்.

இதுகுறித்து அறி​வியல் பாட ஆசிரியர்​கள் கூறும்​போது, “அறி​வியல் தேர்​வில் அனைத்​துப் பிரிவு வினாக்​களும் மிக எளி​தாக இருந்​தன. சராசரி​யாக படிக்​கும் மாணவர்​கள்​கூட 70 சதவீத மதிப்​பெண்​களைப் பெற​முடி​யும். இந்த ஆண்டு அறி​வியல் பாடத்​தில் முழு மதிப்​பெண் பெறும் மாணவர்​களின் எண்​ணிக்கை கணிச​மாக அதி​கரிக்​கும்” என்​றனர்.

சமூக அறி​வியல் பாடத் தேர்வு ஏப்​.2-ம் தேதி நடை​பெற உள்​ளது. ஒட்​டுமொத்​த​மாக, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்​.6-ம் தேதி​யுடன் முடிவடைகிறது. தேர்வு முடிவு​கள் மே 20-ம் தேதி வெளி​யிடப்பட உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories