JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Friday, April 10, 2026

தலைமையாசிரியர்களின் காழ்ப்புணர்ச்சியும் பணி சான்று அலைகழிப்பும்

சில பள்ளிகளில் தலைமையாசிரியர்களின் சொந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வு எழுதுவதற்கான பணி அனுபவ சான்று வழங்குவதில் அலைகழிப்பு.

இன்று 10.04.2026 ஆசிரியர் தகுதி சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்க கடைசி நாளாக இருந்தபோதிலும் சில தலைமை ஆசிரியர்கள் தன் சொந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக பள்ளிகளில் 15 ஆண்டு காலமாக பணி புரியும் பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு தகுதி உள்ள போதிலும் பணிச்சான்று வழங்க மறுக்கிறார்கள். இதற்கான சரியான வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டால் இது போன்ற அலைகழிப்புகள் தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது. இத்தகைய நிலையை சரி செய்யவும், சொந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற செயல்கள் ஈடுபடும் தலைமை ஆசிரியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதும் ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.




சுகந்தீனா MA., B.Ed., TTC.

97516 30066

No comments:

Post a Comment