Subscribe Us

Saturday, May 30, 2026

01.06.2026 முதல் அரசு ஊழியர்களுக்கு முக அடையாள (பயோ மெட்ரிக்) வருகைப் பதிவேடு


01.06.2026 முதல் அரசு ஊழியர்களுக்கு முக அடையாள (பயோ மெட்ரிக்) வருகைப் பதிவேடு கட்டாயமாகிறது

மனித வள மேலாண்மை துறையின் துணைச் சயலாளர் கடிதத்தில், அரசு முதன்மைச் செயலாளரின் அறிவுறுத்தலின்படி, மனித வள மேலாண்மைத் துறையில் 01.06.2026 முதல் பயோமெட்ரிக் / முக அடையாள வருகைப் பதிவு முறை அமலுக்கு வரும் எனவும், எனவே, இந்தத் துறையின் அனைத்து அலுவலர்கள்/பணியாளர்கள் காலை 10.00 மணிக்கு முன் அலுவலகத்திற்கு வருமாறும், மறு அறிவிப்பு வரும் வரை பயோமெட்ரிக் / ஃபேஸ் ஐடி (முக அடையாள) வருகைப் பதிவு மற்றும் நேரடியாக அலுவலகத்தில் உங்கள் இருப்பை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், அனைத்து அலுவலர்களும் பணியாளர்களும் பணியில் இருக்கும்போது அடையாள அட்டைகளை அணியுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment