
01.06.2026 முதல் அரசு ஊழியர்களுக்கு முக அடையாள (பயோ மெட்ரிக்) வருகைப் பதிவேடு கட்டாயமாகிறது
மனித வள மேலாண்மை துறையின் துணைச் சயலாளர் கடிதத்தில், அரசு முதன்மைச் செயலாளரின் அறிவுறுத்தலின்படி, மனித வள மேலாண்மைத் துறையில் 01.06.2026 முதல் பயோமெட்ரிக் / முக அடையாள வருகைப் பதிவு முறை அமலுக்கு வரும் எனவும், எனவே, இந்தத் துறையின் அனைத்து அலுவலர்கள்/பணியாளர்கள் காலை 10.00 மணிக்கு முன் அலுவலகத்திற்கு வருமாறும், மறு அறிவிப்பு வரும் வரை பயோமெட்ரிக் / ஃபேஸ் ஐடி (முக அடையாள) வருகைப் பதிவு மற்றும் நேரடியாக அலுவலகத்தில் உங்கள் இருப்பை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், அனைத்து அலுவலர்களும் பணியாளர்களும் பணியில் இருக்கும்போது அடையாள அட்டைகளை அணியுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.






No comments:
Post a Comment