அதிகாரம்:45 பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண்:448
குறள்:
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.
பொருள்:
இரண்டொழுக்க பண்புகள் :.
1. சூழ்நிலைக்கேற்றவாறு சிந்தித்து அளவான வார்த்தைகளைப் பேசுவேன்.
2. தகாத வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன்.
பொன்மொழி :
வாய்ப்புக்காக காத்திருக்காதே; வாய்ப்பை உருவாக்கு.
Thought for the Day :
Kindness costs nothing but means everything.
பொது அறிவு :
1.தேசிய கீதம் இல்லாத நாடு எது?
சைப்ரஸ்.
2. நதிகள் இல்லாத நாடு எது?
வாடிகன்
English words :
Neglect – Ignore, புறக்கணி.
Conceal - Hide something from sight, மறை.
புவியியலும் சுற்றுசூழலும் :
NMMS :
SAT - கணிதம்
ஒரு பொருளை ₹850 க்கு விற்றதால் கிடைத்த இலாபமும் , அதே பொருளை ₹570 க்கு விற்றதால் ஏற்பட்ட நட்டமுமம் சமம் எனில் அந்த பொருளின் அடக்க விலை _________________ (1) ₹280.
(2)₹ 710.
(3) ₹720.
(4) @₹1420.
விடை: (2) ₹710
நீதிக்கதை
"ஒரு சிறிய விதையின் வெற்றி"
ஒரு கிராமத்தில் ஹேமா என்ற சிறுமி வாழ்ந்து வந்தாள். அவள் தினமும் பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒரு வயதான தாத்தா மரக்கன்றுகளை நட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.
ஒருநாள் ஹேமா கேட்டாள்:
"தாத்தா, நீங்கள் நட்ட இந்த மரங்கள் பெரியதாக வளர பல ஆண்டுகள் ஆகுமே. அப்போது நீங்கள் இருப்பீர்களா?"
தாத்தா சிரித்துக் கொண்டு,
"நான் இல்லாவிட்டாலும், இந்த மரத்தின் நிழலில் ஓய்வெடுப்பவர்கள் இருப்பார்கள். நான் பெற்ற நன்மையைப் போல, மற்றவர்களும் நன்மை பெற வேண்டும் என்பதற்காகத்தான் இதை நடுகிறேன்," என்றார்.
அந்த வார்த்தைகள் யாழினியின் மனதில் பதிந்தன. அன்றே அவளும் வீட்டில் ஒரு மாமரக் கன்றை நட்டாள். தினமும் தண்ணீர் ஊற்றி அன்புடன் பராமரித்தாள்.
சில ஆண்டுகள் கழித்து, அந்த மரம் பெரியதாக வளர்ந்து, அதன் நிழலில் மக்கள் ஓய்வெடுத்தனர். அதன் பழங்களை குழந்தைகள் மகிழ்ச்சியுடன் சாப்பிட்டனர்.
அப்போது யாழினி, "ஒரு சிறிய நல்ல செயல் பலருக்கு பெரிய மகிழ்ச்சியைத் தரும்" என்பதை உணர்ந்தாள்.
நீதி:
"நாம் செய்யும் சிறிய நற்செயலும், நாளை பலரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்." 🌱
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment