Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 20, 2018

அண்ணாமலைப் பல்கலை. மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு




சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2018 -19 -ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 30 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பல்கலைக்கழகத்தில் கீழ்கண்ட பாடப் பிரிவுகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு பாடப் பிரிவுகளைப் பொறுத்து, முதல்கட்டமாக முறையே கடந்த 14, 15 -ஆம் தேதிகள் இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தன. தற்போது வருகிற 30 -ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று இந்தப் பல்கலைக்கழக பதிவாளர் கே.ஆறுமுகம் தெரிவித்தார்.



படிப்புகள் விவரம்: எம்.ஏ. அனைத்துப் பாடப் பிரிவுகள், எம்.காம், எம்.எஸ்சி, எம்.எஸ்.டபிள்யூ, எம்.ஹெச்.எஸ்.எஸ், எம்.ஆர்.எஸ், எம்.எஸ்சி. (மரைன் சயின்ஸ்), எம்.எஸ்சி. நர்சிங், எம்.பி.ஏ, M.Lib.I.Sc. / B.Lib.I.Sc. / B.P.Ed. / M.P.Ed. / Diploma in General Nursing and Midwifery, M.P.T. / Certificate Programme in Dental Mechanist, etc.,All Music Programmes.