Saturday, September 15, 2018

மாற்றுத் திறனாளிகளிடம் சுங்க கட்டணம் வசூலிக்க விலக்களிக்க கோரிய வழக்கில் நெடுஞ்சாலைத் துறைக்கு உத்தரவு !!

மாற்றுத் திறனாளிகள் வாகனங்களை இயக்கும்போது டோல்கேட்டில் சுங்க கட்டணம் வசூலிக்க விலக்களிக்க கோரிய வழக்கில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை செயலாளர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளார்.



மதுரை விளாங்குடியை சேர்ந்த சட்டக் கல்லூரி பேராசிரியர் குமரன் தொடர்ந்த வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.