100க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகளின் முதலாண்டு மாணவர் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பதிவுக்கட்டணம் செலுத்தாதது, மாணவர் சான்றிதழ் சரி பார்க்காததால் அண்ணா பல்கலை., நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விவரங்களை அனுப்பும் கல்லூரிகளுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் தகவல் அளித்துள்ளது.


