Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, March 6, 2019

புதுக்கோட்டையில் பிளஸ் -1 பொதுத்தேர்வினை 18,834 மாணவ,மாணவிகள் எழுதினர்.முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வு


புதுக்கோட்டை,மார்ச்.6 : புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வினை 18834 மாணவ,மாணவிகள் எழுதினர்.



புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வினை 9640 மாணவர்கள்,10589 மாணவியர்கள் என 20229 மாணவ,மாணவியர்கள் எழுத இருந்தனர். ஆனால் இன்று 8622 மாணவர்கள்,10212 மாணவிகள் என மொத்தம் 18834 மாணவர்கள் தான் எழுதினார்கள்.1018 மாணவர்கள்,377 மாணவிகள் என 1395 மாணவ,மாணவிகள் தேர்வெழுதவில்லை..



முன்னதாக புதுக்கோட்டையில் உள்ள டி.இ.எல்.சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் பொதுத்தேர்வு நடைபெறும் மையத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



தேர்வுப் பணியில் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் 82 பேர்,கூடுதல் கண்காணிப்பாளர்கள் 3 பேர் ,துறை அலுவலர்கள்3 பேர் ,அறை கண்காணிப்பாளர்கள் 961 பேர்,பறக்கும் படையினர் 164 பேர்,வழித்தட அலுவலர்கள் 18 பேர் ஈடுபட்டுள்னர்.
தேர்வானது மார்ச்6 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி முடிவடைகிறது..