Breaking

Saturday, April 27, 2019

மாணவர்களுக்கு புகையிலை விற்பனை: பள்ளிக்கல்வி இயக்குநரின் அதிரடி உத்தரவு



தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு புகையிலை விற்பனை செய்யும் கும்பல் குறித்த தகவல் அதிகம் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.



பள்ளிகளின் அருகே மாணவர்களுக்கு புகையிலை விற்பனை செய்யும் கும்பல் பற்றி போலீசிடம் புகார் அளிக்க வேண்டும் என்றும், அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்