இதற்குக் காரணம் தங்களுடைய கற்பித்தல் முறைகளில் தங்களுக்கு திருப்தி இல்லாமைதான். அப்படி இருந்தால் வருடம் தோறும் கல்வித் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சியை அதிகப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாக மதிப்பெண் தேர்ச்சி குறைந்துவருகிறது. இந்நிலையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர், பணியாளர் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிக ஊதியம் பெற்றும் அரசு ஆசிரியர்கள் தேர்ச்சி விகிதம் காட்டாததால் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மீது நம்பிக்கை இழந்தனர் என்று நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.





