![](https://assets-news-bcdn-ll.dailyhunt.in/cmd/resize/400x400_60/fetchdata13/images/5e/85/0c/5e850ce9ab568523becaf1c8ccceec0d.jpg)
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் வெள்ளிக்கிழமை (செப். 27) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்கள் பயனடையும் வகையில் பல்வேறு தனியார் துறையினரால் நடைபெறும் முகாமில், பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
எனவே, மேற்கண்ட கல்வித் தகுதியும், விருப்பமும் உள்ளோர் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் முகாமில் பங்கேற்ற பயன் பெறலாம் என, ஆட்சியரால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.