
தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய் – 7 தண்ணீர் – 2 கப் இஞ்சி – சிறிய துண்டு எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் தேன் – தேவைக்கு
செய்முறை :
இஞ்சியை கழுவி தோல் நீக்கி வைக்கவும். நெல்லிக்காயை நன்கு கழுவி கொட்டையை நீக்கி விட்டு பொடியாக வெட்டிக்கொள்ளவும். மிக்ஸியில் நெல்லிக்காயை போட்டு அதனுடன் இஞ்சி, 2 கப் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும். உங்கள் தேவைக்கேற்ப தண்ணீரை அதிகம் சேர்த்து நன்கு மைய அரைத்து கொள்ளலாம்.
அரைத்த ஜூஸை வடிகட்டி கொள்ளவும். பின், அதில் தேன், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்து வரலாம். தினசரி நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் சருமம் இளமை தோற்றத்துடன் இருக்கும்.
No comments:
Post a Comment