சென்னை: பள்ளி திறக்கும் நாளில், அனைத்து மாணவர்களுக்கும், இரண்டாம் பருவ பாடப் புத்தகங்களை வழங்க வேண்டும் என, இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில், அனைத்து மாணவர்களுக்கும், முதல் பருவ தேர்வு முடிந்து, காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. அக்டோபர், 3ல், மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.பள்ளிகள் திறந்ததும், இரண்டாம் பருவ பாடங்கள் நடத்தப்பட உள்ளன.
எனவே, இரண்டாம் பருவ பாடப் புத்தகங்களை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் இருந்து, வரும், 30ம் தேதிக்குள், பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். அவற்றை, அக்., 3ல், மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்குனர், கண்ணப்பன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
எனவே, இரண்டாம் பருவ பாடப் புத்தகங்களை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் இருந்து, வரும், 30ம் தேதிக்குள், பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். அவற்றை, அக்., 3ல், மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்குனர், கண்ணப்பன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.