Breaking

Wednesday, October 2, 2019

தமிழக போக்குவரத்து கழகத்தில் பயிற்சிப்பணி. மொத்தம் 660 பேர்!!



தமிழ்நாடு போக்குவரத்து கழக நிறுவனத்தின் கும்பகோணம், விழுப்புரம், நாகர்கோவில், திருநெல்வேலி கிளைகளில் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 660 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரிகள் 218 பேரும், டெக்னீசியன் பிரிவில் 442 பேரும் தேர்வு நடக்கவுள்ளது.



கல்வி தகுதி; டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் மற்றும் பி.இ. படித்தவர்கள்.

அக்டோபர் 11-ந்தேதிக்குள் https://www.boat-srp.com என்ற தளத்தில் பெயரை பதிவு செய்து, 21-ந் தேதிக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான சான்றிதழ் சரிபார்த்தல் பணி அக்டோபர் 30,31 மற்றும் நவம்பர் 1,2-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.