Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, May 31, 2020

தமிழகத்தில் பொதுமுடக்க தளர்வுகளின் முக்கிய அம்சங்கள்




சென்னை: மத்திய அரசின் அறிவிப்பின் அடிப்படையில் ஜூன் 30 நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீடிக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் அம்சங்கள்:

போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு:

  • முதல் மண்டலம்: கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கரூர், சேலம், நாமக்கல்
  • இரண்டாவது மண்டலம்: தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி
  • மூன்றாவது மண்டலம்: விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி
  • நான்காவது மண்டலம்: நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை
  • ஐந்தாவது மண்டலம்: திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்
  • ஆறாவது மண்டலம்: தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி
  • ஏழாவது மண்டலம்: காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு
  • எட்டாவது மண்டலம்: சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி

பொது போக்குவரத்து எங்கெங்கு அனுமதி? 
  • கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல்லில் அனுமதி
  • தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி...
  • விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி...
  • நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை
  • திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அனுமதி
  • பொது போக்குவரத்தில் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை
  • ஜூன் 1 முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் 50% பேருந்துகள் இயங்கும்.
  • ஒரு பேருந்தில் 60 சதவீத இருக்கைகளில் பயணிகள் அனுமதிக்கப்படுவர்
  • அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் தனியார் பேருந்துகளும் இயங்க அனுமதி
  • ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு பயணம் செய்ய இ-பாஸ் தேவை
  • மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கு ஜூன் 30ஆம் தேதி வரை தடை விதிப்பு
  • மண்டலத்திற்குள் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை.
  • 50% ஊழியர்களுடன் அனைத்து தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி
  • தமிழகத்தில் ஜூன் 1 முதல் 7ஆம் தேதி வரை காய்கறிக்கடைகள், உணவகங்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரை இயங்கலாம்
  • ஆட்டோக்களில் பயணிகள் 2 பேர் வரை பயணம் செய்ய அனுமதி
  • ஜூன் 8 முதல் தேநீர் கடைகள், உணவகங்களில் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி
  • 5 பேருக்கு மேல் ஒரு கடையில் கூடக் கூடாது
  • சலூன்கள், அழகு நிலையம், ஆட்டோக்கள், வாடகை டாக்ஸிகள், தேநீர் கடைகள், பெரிய கடைகள் ஏசி வசதியை பயன்படுத்தாமல் செயல்பட அனுமதி
  • வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றை திறக்க தடை நீட்டிப்பு
  • வணிக வளாகங்கள் தவிர பிற பெரிய கடைகள் குளிர்சாதன வசதியின்றி 50% பணியாளர்களுடன் செயல்படலாம்
  • திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், பார், கூட்ட அரங்குகளை திறக்க தடை
  • வழிபாட்டு தலங்களுக்கான தடை தொடரும்.
  • அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கான தடை தொடரும்
  • திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி.
  • இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில் 20 பேர்கள் பங்கேற்க அனுமதி.
  • மத்திய உள்துறை அமைச்சகத்தால், அனுமதிக்கப்பட்ட பணிகளை தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை நீட்டிப்பு.
  • மெட்ரோ ரயில் மற்றும் மின்சார ரயில் சேவைக்கு அனுமதி மறுப்பு
  • ஜூன் 30 வரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனங்களை திறக்க தடை தொடர்கிறது
  • கல்வி நிறுவனங்கள் இணைய வழிக்கல்வி கற்றலை தொடரலாம்; அதனை ஊக்கப்படுத்தலாம்
  • நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு செல்ல தடை
  • தொழில் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி
  • தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் 20% பணியாளர்கள் அதிகபட்சம் 40 பேருடன் இயங்கலாம்
  • 20 சதவீத தகவல் தொழில்நுட்பம் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற ஊக்குவிக்க வேண்டும்
  • கரோனா பணியில் உள்ளவர்களுக்கு தடையில் இருந்து விலக்கு
  • நாளை முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 முதல் இரவு 8 மணி வரை இயங்கும்.

No comments:

Post a Comment