தனித் தேர்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் இறுதியில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.தமிழகத்தில் தனித்தேர்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுதேர்றும் ஏப்ரலில் நடத்தப்படும். அதன்படி நடப்பாண்டு 8-ஆம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 2 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கரோனா பாதிப்பின் காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
எனினும், மறு தேர்வுக்கால அட்டவணை எதுவும் அறிவிக்கப்படாததால் தனித்தேர்வா்கள் மத்தியில் குழப்பம் நிலவிவருகிறது.
இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறுகையில் 'தற்போதைய நிலவரத்தின்படி 10, 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்தி முடித்தபின் ஜூன் மாத இறுதியில் தனித்தேர்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், ஊரடங்கு தளா்த்தப்பட்ட பின்னரே இந்த விவகாரத்தில் இறுதியான முடிவுகள் மேற்கொள்ளப்படும்' என்றனா்.



No comments:
Post a Comment