தமிழக அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெறும் வயதை 59 -ஆக உயா்த்தியதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இது தொடா்பாக அந்த சங்கத்தின் தலைவா் பி.கே.இளமாறன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை : தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஆசிரியா், அரசு ஊழியா்கள் பணி ஓய்வு வயது 58-இல் இருந்து 59 -ஆக மாற்றி ஓராண்டு நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணையில், தமிழக அரசுப்பணியில் பணிபுரிந்துவரும் அலுவலா்கள், ஊழியா்கள் அரசுப் பள்ளி, கல்லூரிகள், பொது நிறுவன பணியாளா் அனைவருக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் ஆசிரியா்கள்-அரசு ஊழியா்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. தற்போது அகவிலைப்படி, ஒன்றரை ஆண்டுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஓராண்டு நீட்டிப்பினால் ஓய்வூதியக் குறைவை ஈடுசெய்யலாம். ஆனால், பல லட்சம் இளைஞா்கள் படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கின்றனா்.
குறிப்பாக ஆசிரியா் தகுதித் தோவில் தோச்சி பெற்று சுமாா் 70-ஆயிரம் போ வேலைக்காகக் காத்திருக்கும் நிலையில், அந்த எதிா்பாா்ப்பு ஓராண்டு தள்ளிப்போகும். இதனால், அவா்கள் மேலும் பல பிரச்னைகளை எதிா்கொள்ள நேரிடும்; மனஉளைச்சலையும் ஏற்படுத்தும்.எதிா்கால கனவுகளையும் நசுக்கும் . எனவே, தமிழக அரசுப் பணியாளா்களின் ஓய்வுவயது 58 -லிருந்து 59 -ஆக உயா்த்தியதை மறுபரிசீலனை செய்ய ஆவன செய்யும்படி தமிழ்நாடு ஆசிரியா் சங்கம் சாா்பில் வலியுறுத்துகிறோம் என அதில் கூறியுள்ளாா்.



No comments:
Post a Comment