Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 19, 2020

தமிழகத்தில் சூரிய கிரகணம் காலை 10.20க்கு தொடங்கி மதியம் 1.45 வரை நீடிக்கும்



இந்தியாவில் வருடாந்திர வளைய நெருப்பு சூரிய கிரகணம் வரும் ஜூன் 21-ம் தேதி தெரிகிறது. இந்தியாவில் வருடாந்திர சூரிய கிரகணம் வரும் ஜூன் 21-ம் தேதி காலை 9:15க்கு தொடங்கி மதியம் 3:04 வரை முடிகிறது. அந்த, நிகழ்வை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. இந்தியாவில் சூரிய கிரகணம் வட பகுதியின் சில இடங்களின் காலையில் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு சூரிய கிரகணம் மதியம் 12:10 மணிக்கு தெரியும். வெறும் கண்களால் பார்க்காமல் கண்களை மூடி பார்க்கவேண்டும். இந்தியாவில் மட்டுமில்லாமல் மத்திய ஆபிரிக்க, காங்கோ, எத்தியோப்பியா, பாகிஸ்தான் மற்றும் சீனா உள்ளிட்ட ஆப்பிரிக்காவிலும் தெரியக்கூடும். இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் சுமார் 6 மணி நேரம் நீடிக்கும். தமிழகத்தில் சூரிய கிரகணம் காலை 10.20க்கு தொடங்கி மதியம் 1.45 வரை நீடிக்கும்.சென்னையை பொறுத்தவரை 34% சூரியனுடைய பரப்பை சந்திரன் மறைப்பதை பார்க்க முடியும் என சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மைய செயல் இயக்குநர் சவுந்தரராஜ பெருமாள் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment