JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Monday, June 22, 2020

நாம் சாப்பிடும் உணவு எப்படி இரத்தமாக மாறுகிறது?

நாம் மென்று சாப்பிடும் உணவை வயிற்றில் சுரந்திருக்கும் நொதிகள் (ENZYMES) மேலும் கூழாக்குகிறது. இதற்குக் குடல் சுவர்கள் பயன்படுகிறது. இது அசைந்து உணவை சிறுகுடற்பகுதிக்குக் கொண்டு செல்கிறது. (வெறும் வயிறாக இருக்கும் போது இந்தக் குடல் தசைகளின் இயக்கத்தை தான் நாம் வயிறு பிசைகிறது என்கிறோம் ஜீரணிக்கக் கூடியவற்றை மிகவும் கூழாக்கப்பட்ட உணவை விலி என்ற உறிஞ்சிகள் இரத்த நாளத்திற்கு அனுப்புகிறது.

இவ்வாறு பல தொடர் இயக்கத்தில் உணவிலிருந்து இரத்தம் பெறப்படுகிறது.

ஜீரணத்தின்போது தலைகீழாக ஒருவர் இருந்தாலும் வாய்வழியே உணவு வராது. குடல் சுவர்கள் அழுத்தமும், ஈர்ப்பு விசை இங்கு வேலை செய்யாது என்பதும் காரணம்.

No comments:

Post a Comment