மணமக்கள் வலது காலை எடுத்து வைத்து வருவது ஏன்?

மணமகனையும், மணமகளையும் திருமணமானதும் வீட்டிற்குள் அழைக்கும் போது வலது காலை எடுத்து வைத்து வரும்படி சொல்கிறார்கள். இதற்கு ஆன்மீக ரீதியான காரணங்கள் மட்டுமின்றி விஞ்ஞான ரீதியான காரணங்களும் உள்ளன

நமது உடலில் வலது புறம் உள்ள சக்தியை பாசிட்டிவ் ஆகவும், இடது புறம் உள்ளதை நெகட்டிவ்' ஆகவும் கொள்ள வேண்டும். வலது புறத்தில் அதிகபட்ச சக்தியும், இடது புறம் சற்றே குறைந்த சக்தியும் உள்ளது. எனவேதான் ஈர்ப்பு சக்தி கொண்ட வீட்டின் நுழையும்போது தரையில் (பூமியில்) வைத்து 'பாசிட்டிவ் வான வலது காலை எடுத்து வைக்கிறார்கள். அப்போது வலது கால் தரும் அழுத்தமும் பூமியின் ஈர்ப்பு சக்தியும் சேர்ந்து நிமிர்ந்த நடையைத் தருகிறது. பூமியில் இடது காலை வைத்தால் பூமியின் ஈர்ப்பு கீழே இழுக்க சக்தி குறைந்த இடது காலின் ஈர்ப்பு மேலே தூக்கப்பட்டு, காலை ஊன்றுவதற்குரிய நிலையான அழுத்தம் கிடைக்காமல் தடுமாற்றம் ஏற்படும். இதனால் கீழே விழ நேரலாம் முதன்முதலாகத் திருமணம் முடிந்து வருபவர்கள் தடுமாறி விழ நேர்ந்தால் சென்டிமெண்டாக அபா குணமாக கருதப்படும். ஆகவேதான் மணமக்கள் வலது காலை எடுத்து வைத்து வருகிறார்கள்.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories