Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, July 7, 2020

450 பட்டதாரி மற்றும் 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள் , அரசு நடுநிலைப்பள்ளிகள் , அரசு உயர்நிலைப்பள்ளிகள் , அரசு மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் காலியாகக் கிடக்கும் ஆசிரியர் பணியி டங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தி நிரப்பி வருகிறது . இந்த வருடம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரி யர் பணியிடங்கள் காலியாக உள்ளன . அந்த இடங்களை நிரப்ப பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஏற்கனவே ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடிதம் எழுதி உள்ளார் . இதை யொட்டி ஆசிரியர் தேர்வு வாரி யம் விரைவில் 1,062 முதுகலை பணியிடங்களை நிரப்ப எழுத்துத் தேர்வு நடத் துவதற்கான அறிவிப்பை ஆசிரியர் வெளியிட உள்ளது . அதுபோல அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 450 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு நடத்தி நிரப்பப்பட உள்ளது .

2 comments: