Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, July 14, 2020

சளி தொல்லைக்கு நிரந்தர தீர்வு தரும் கற்பூரவள்ளி டீ!




தேவையான பொருட்கள் :

கற்பூரவள்ளி இலைகள் – 5,

இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்புன்

டீத்தூள் – ஒரு டீஸ்பூன்,
எலுமிச்சை சாறு – தேவையான அளவு
தேன் – தேவைக்கு,
தண்ணீர் – 2 கப்.

செய்முறை :

கற்பூரவள்ளி இலையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் டீத்தூள், இஞ்சித் துருவல், ஓமவல்லி இலைகள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பிறகு வடிகட்டி தேவையான அளவு தேன், எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.

No comments:

Post a Comment