Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, July 28, 2020

எம்.பில்., முழுநேர படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரியில் மொழியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.பில்., மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சம்பத் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் 2020--21 ஆம் ஆண்டிற்கான எம்.பில் (M.Phil.) படிப்பிற்கான சேர்க்கை நடைபெறுகிறது. ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்.) முழு நேரப்படிப்புக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இலக்கியவியல், மொழியியல், மானிடவியல், நாட்டுப்புறவியல் போன்ற பாடப்பிரிவுகளில் எம்.பில்., பட்டம் பயில விரும்பும் மாணவர்கள் முதுநிலைப் பட்டப்படிப்பில் குறைந்தது 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்கள் 50 சதவீதம் பெற்றால் போதுமானது. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் பட்டியல், இளங்கலை, முதுகலை மதிப்பெண் பட்டியல், பட்டச் சான்றிதழ்கள் சாதிச்சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றின் இரண்டு நகல் படிகள் இணைத்தல் வேண்டும்.மேலும் பதிவாளர், தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் என்ற முகவரிக்கு ரூ.300 க்கான டி.டி., இணைக்க வேண்டும். 

ஆதிதிராவிடர், பழங்குடி வகுப்பினர் சாதிச்சான்றிதழை இணைத்து ரூ. 150க்கான டி.டி.,எடுத்தால் போதுமானது,விண்ணப்பங்களுடன் அனைத்து சான்றிதழ்களை இணைத்து வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள், இயக்குநர், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், தொல்காப்பியர் முதன்மைச் சாலை, லாஸ்பேட்டை, புதுச்சேரி 605008 என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு 0413--2255827 அல்லது pilc.py@gov.in என்ற இ-மெயில் முகவரியை அணுகவும்.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment