இலக்கியவியல், மொழியியல், மானிடவியல், நாட்டுப்புறவியல் போன்ற பாடப்பிரிவுகளில் எம்.பில்., பட்டம் பயில விரும்பும் மாணவர்கள் முதுநிலைப் பட்டப்படிப்பில் குறைந்தது 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்கள் 50 சதவீதம் பெற்றால் போதுமானது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் பட்டியல், இளங்கலை, முதுகலை மதிப்பெண் பட்டியல், பட்டச் சான்றிதழ்கள் சாதிச்சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றின் இரண்டு நகல் படிகள் இணைத்தல் வேண்டும்.மேலும் பதிவாளர், தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் என்ற முகவரிக்கு ரூ.300 க்கான டி.டி., இணைக்க வேண்டும்.
ஆதிதிராவிடர், பழங்குடி வகுப்பினர் சாதிச்சான்றிதழை இணைத்து ரூ. 150க்கான டி.டி.,எடுத்தால் போதுமானது,விண்ணப்பங்களுடன் அனைத்து சான்றிதழ்களை இணைத்து வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள், இயக்குநர், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், தொல்காப்பியர் முதன்மைச் சாலை, லாஸ்பேட்டை, புதுச்சேரி 605008 என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு 0413--2255827 அல்லது pilc.py@gov.in என்ற இ-மெயில் முகவரியை அணுகவும்.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment