Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, July 7, 2020

உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட் ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடல் சுத்தமாவதோடு, உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள் :

பீட்ரூட் - 2
புதினா இலை - சிறிதளவு
பனை வெல்லம் - 2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
பால் - 1/2 கப்
ஏலக்காய் - 1
இஞ்சி - சிறிய துண்டு
எலுமிச்சை சாறு - சிறிதளவு

செய்முறை :

  • பனை வெல்லத்தை பொடி செய்து கொள்ளவும்.
  • பீட்ரூட் தோலை சீவி விட்டு சிறிய துண்டுகளாக வெட்டி, சிறிது தண்ணீரில் போட்டு வைக்கவும். பீட்ரூட்டின் நிறமெல்லாம் அந்தத் தண்ணீரில் இறங்கும்.
  • அந்த தண்ணீரோடு சேர்த்து பீட்ரூட் புதினா, ஏலக்காய், இஞ்சி, பனை வெல்லம், உப்பு சேர்த்து பால் ஊற்றி மிக்சியில் அரைக்கவும்.
  • அரைத்த ஜூஸை வடிகட்டி அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.
  • சத்தான பீட்ரூட் ஜூஸ் ரெடி!



No comments:

Post a Comment