பச்சை காய்கறிகளின் ஊட்டச்சத்தை முழுமையாகப் பெறுவதற்கு, ஃபிரெஷான பொருள்களை சரியான முறையில் ஸ்டோர் செய்து வைக்க வேண்டும்.
பச்சைக் காய்கறிகள் வாங்கும்போது இருக்கும் அளவைவிட, சமைத்தப் பின்பு அளவு குறைந்துவிடும் என்பதை மறக்க வேண்டாம். அரை கிலோ வெந்தயக் கீரை அல்லது பசலைக் கீரை, சமைத்த பின்பு ஒரு கப் அளவுக்கே வரும்.
நல்ல பச்சை நிறத்தில் இருக்கும் இலைகளைத் தேர்வு செய்யவும். மஞ்சள் நிறம் முற்றிய இலையைக் குறிக்கும்.
கீரைகளை சேமித்து வைக்க, அவற்றை ஈரமான பேப்பர் டவலால் சுற்றி, துளையிட்ட பிளாஸ்டிக் பையில் வைத்து, ஃபிரிட்ஜில் வைக்கவும். பெரும்பாலான கீரைகள் குறைந்தபட்சம் ஒரு வாரம் வரை ஃபிரெஷாக இருக்கும்.
No comments:
Post a Comment