Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, July 20, 2020

பகுதிநேர ஆசிரியர்களுக்கும்சம்பளம் வழங்க கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் விளையாட்டு, கலை-பண்பாட்டு பயிற்சியாளர் நலச்சங்க தலைவர் செந்தில்குமார், செயலாளர் கண்ணன் கூறியதாவது:அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பகுதிநேரமாக சிலம்பம், கராத்தே, ஓவியம், பரதநாட்டியம், ஸ்கேட்டிங், வில் வித்தை, கீபோர்டு, டிரம்ஸ், செஸ், ஆர்ட் அன் கிராப்ட், மேற்கத்திய நடனம், கிராமியப்பாடல் போன்ற கலைகளை மாணவர்களுக்கு கற்றுத்தருகிறோம்.கொரோனா பரவலால் பள்ளிகள் திறக்கப்படாததால் 3 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. இதனால் மிகவும் சிரமப்படுகிறோம், பள்ளிநிர்வாகம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும், எனக்கூறினர். சங்க துணைச்செயலாளர் சுகந்தி உடனிருந்தார்.

No comments:

Post a Comment