தேனிமாவட்டத்தை சேர்ந்த திருநங்கை ஆராதனா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த காவலர் பணிகோரி தொடர்ந்த வழக்கின் அடிப்படையிலும் உச்சநீதிமன்றதின் நால்சா vs இந்தியா 2014 ல் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும் 26.ஜூன்2020 அன்று தமிழ்நாடு சீருடை பணியாளர் ஆணையம் இனிவரும் காலங்களில் மாற்றுபாலினத்தை சார்ந்தவர்களுக்கு பட்டியலின மக்களை போல வயதுவரம்பை தளர்த்தி ஆணை விடுத்துள்ளது ..இது மிகவும் மகிழ்ச்சியான மேலும் ஒருபடி சமூக முன்னேற்றத்திற்கான வழி. அதேநேரத்தில் மாற்றுபாலினத்தவர்களும் பட்டியிலனத்தவர்களும் ஒன்றல்ல .
எம் சமூக முன்னேற்றதில் அக்கறை கொண்டு ,எங்களோடு உடனின்று ,எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சட்டபோராட்டம் நடத்திய உயர்நீதிமன்ற வழக்குரைஞர் திருமிகு.சஜீவ் அவர்களுக்கு எம் சமூகத்தின் நன்றி.
No comments:
Post a Comment