இன்றைய காலகட்டத்தில் உணவுமுறைகளிலும், உணவுப் பொருட்களிலும் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றத்தால் அனைத்து வகையான தொந்தரவுகளும் மிகச் சிறிய வயதிலேயே ஆரம்பித்து விடுகின்றன. இதற்கு ஒரே தீர்வு மீண்டும் இயற்கைக்கு திரும்புவது ஒன்றே மிகச் சரியான வழி என இயற்கை வேளாண் மருத்துவர்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில் தினமும் காலை ஒரு இளநீரை குடித்து வந்தாலே போதும் எண்ணற்ற பயன்களைப் பெற முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கவும், மேலும் கொழுப்புக்கள் உடலில் சேராமல் தடுக்கவும் உதவுகிறது. மன அழுத்தத்தை குறைத்து இதய பாதிப்பை நீக்குகிறது. மலச்சிக்கலை நீக்குகிறது. வயிறு சம்பந்தமான செரிமான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவை சீரான முறையில் வைக்க உதவுகிறது.
No comments:
Post a Comment