Breaking

Monday, August 24, 2020

வங்கி பணியிடங்களுக்கு ஆன்லைனில் இலவச பயிற்சி: கலெக்டர் தகவல்



திருவள்ளூர்: ஐபிபிஎஸ்சினால் அறிவிக்கப்பட்ட வங்கி காலி பணியிடங்களுக்கு விண்ணப்பித்த திருவள்ளுர் மாவட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினால் இணையம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளதாக கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். 

மேற்காணும், காலி பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொலைபேசி வாயிலாக தங்களது விருப்பத்தினை கைப்பேசி எண்ணுடன் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பயிற்சி வகுப்பு துவங்கும் நாள் கைப்பேசி வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும். மேலும், விவரங்களுக்கு 044-27660250, 9444815728 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment