Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, August 24, 2020

பி.இ. மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ஆவடி இயந்திர தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு!

பி.இ. அல்லது டிப்ளமோ படித்தவர்கள் சென்னை ஆவடியில் உள்ள இயந்திர தொழிற்சலையில் ஒரு வருட வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

சென்னையில் ஆவடியில் மத்திய அரசு நிறுவனமான இயந்திர தொழிற்சலை இயங்கி வருகிறது. அங்கு தற்காலிகமாக ஒரு வருடத்திற்கு மட்டும் பணிபுரிய நேர்காணல் நடைபெற உள்ளது.
இதற்கான அறிவிப்பை தொழிற்சாலை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், தொழிநுட்ப பிரிவில் பி.இ பட்டதாரிகள், டிப்ளமோ பட்டம் பெற்றவர்கள், அதாவது 2018 அல்லது 2019 பட்டம் முடித்திருக்க வேண்டும். அவர்கள் அனைவரும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தேர்வு பெறுவோரில் பி.இ. பட்டதாரியாக இருந்தால் மாதந்திர உதவி தொகையாக ரூ.9,000 மற்றும் டிப்ளமோ என்றால் ரூ.8,000 வழங்கப்படும்.





இந்த வேலை வாய்ப்புக்கான நேர்காணல் செப்டம்பர் 3ம் தேதி காலை 8 மணிக்கு நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக விருப்பம் உள்ளவர்கள் www.mhrdnats.gov.in என்ற இணைய முகவரியில் பதிவு செய்து கொள்ளவது அவசியம். நேரில் செல்லும் போது அனைத்து அசல் சான்றுகளையும் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், ஒரு வருட காலத்துக்கான தற்காலிக பணி என்பதால், அரசு வேலையாக கருதப்படாது என்று ஆவடி இயந்திரத் தொழிற்சாலை விளக்கம் அளித்துள்ளது.

No comments:

Post a Comment