Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, August 17, 2020

"விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்" : இன்று முதல் அமலுக்கு வந்தது!


தமிழகத்தில் கொரோனா பேரிடர் காலம் என்பதால் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்ல தொடர்ந்து இ பாஸ் நடைமுறை அமலில் உள்ளது. இ -பாஸ் நடைமுறை அமலில் இருந்தாலும் அதை விண்ணப்பித்து பெறுவதில் பெரும் சிரமம் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதனால் இன்று (17 ஆம் தேதி) முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தங்குதடையின்றி இ-பாஸ் அனுமதி கிடைக்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

இந்நிலையில் விண்ணப்பித்த உடனே இபாஸ் கிடைக்கும் நடைமுறை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தவறான காரணங்களை கூறி இ-பாஸ் விண்ணப்பத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment