Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, August 4, 2020

மனிதனை வாழவைக்கும் பாகற்காய்


பாகற்காய் இலையின் சாறு, ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால், விஷ சுரம் நின்று விடும். பாகற்காய் "ஜூஸ்" குடித்து வந்தால், செரிமான அமிலம் சுரப்பது மேம்படும். எனவே பசியும் அதிகரிக்கும். கணைய புற்றுநோய் அணுக்களை அழிப்பதில், முக்கிய பங்கு வகிக்கிறது. தினம் இரண்டு வேளை 1 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் சர்க்கரை கலந்து, சாப்பிட்டு வந்தால், மூலநோயினால் ஏற்படும் ரத்தப்போக்கு நின்றுவிடும். பாகற்காய் சூட்டை கிளப்பும் என்பதால், அளவுக்கு அதிகமாக தொடர்ந்து சாப்பிடக்கூடாது. பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால், கண்ணுக்குக்குத் தெரியாத விஷக் கிருமிகள் உடம்பில் ஏறாது. மூன்று நாட்களுக்கு ஒருமுறை பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம். பாகல் இலைச்சாற்றை நிறைய குடித்து, பின் வாந்தி எடுப்பதன் வாயிலாக, அத்துடன் கொடிய விஷம் வெளியேறுகிறது. நீரிழிவுக்கு நல்ல மருந்து : உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு "கப்" பாகற்காய் "சூப்" எடுத்து, அதில் ஒரு "ஸ்பூன்" எலுமிச்சைச் சாறு கலந்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுகிறது.

பாகற்காயில் "பீட்டா-கரோட்டின்"மற்றும் "வைட்டமின்-ஏ" உள்ளதால், கண் சம்பந்தமான நோய்களுக்கு தீர்வாக உள்ளது. மேலும், இதில் உள்ள "வைட்டமின்-சி" மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், கண்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்தும் பாதுகாக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு, பாகற்காய் நல்ல மருந்தாகும். பாகற்காயில், சாரன்டின் என்ற வேதிப்பொருள் உள்ளது.

ரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையை இது குறைக்கும். இதேபோல், பாலிபெப்டைடு பி என்ற இன்சுலின் பாகற்காயில் உள்ளது. இது சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சுலின் மேம்பட உதவுகிறது. வைட்டமின் கலவை : இது கலோரி குறைவான ஓர் உணவு.

இதில் வைட்டமின் பி1, பி2, பி3 ,சி, மக்னீசியம், ஃபோலேட் சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து போன்ற உடலுக்கு நன்மை செய்யும் பல சத்துகள் உள்ளன. குடற்புழுவுக்கு மருந்து : இது இரைப்பை பிரச்னைகளுக்கு நல்ல மருந்து. பாகற்காயை ஜூஸ் ஆக்கிக் குடிப்பது குடலில் உருவாகும் புழுக்கள், ஒட்டுண்ணிகளைக் கொல்ல உதவும். ஒவ்வாமை, வீக்கம், கட்டிகளையும் பாகற்காய் போக்கும்.

விதைகளின் பயன்கள் : பாகற்காய் விதைகள், இதய நோய்களிலிருந்து காக்கும். தேவையற்ற கொழுப்புகளை எரித்து, இதய தமனி அடைப்பு ஏற்படுவதில் இருந்து காப்பாற்றும். புற்றுநோய், லூக்கீமியா, ரத்தசோகை போன்றவை வராமல் தடுக்கும் ஆற்றலும் பாகற்காய் விதைகளுக்கு உண்டு. ஆக, பாசத்திற்குரிய அக்காபோல, நம் நலவாழ்வுக்கு பலம் பாகற்காதானே.!

No comments:

Post a Comment