தற்போது, கொரோனா ஊரடங்கால், பயிற்சி வகுப்புகள் நடத்தவில்லை. போட்டியாளர்கள், வீட்டில் இருந்தபடியே தேர்வுக்கு தயாராகி வருகின்ற நிலையில், கிராமப்புற மாணவர்களும், போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ள, வங்கி அலுவலர், 'ஐ.பி.பி.எஸ்.,- பி.ஓ.,' முதுநிலை தேர்வுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு, இணையதளம் மூலம் அளிக்கப்பட உள்ளது.
இத்தேர்வு, வரும், அக்., 3, 10, 11 தேதிகளில் நடக்கிறது. தேர்வுக்கு, https://www.ibps.in/cwe-probationary-offieceers-management-trainees/ / என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகள், வரும், 29 முதல், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் துவங்க உள்ளது.
கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள், தங்களின் விபரத்தை, onlineclassnkl@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, 04286 -222260 என்ற தொலைபேசி மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு, தங்களுடைய வாட்ஸ் ஆப் எண்ணை பதிவு செய்து, இலவச பயிற்சி பெறலாம். இவ்வாறு, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment