Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, August 13, 2020

DSE - மாணவர் சேர்க்கையில் நடைமுறையிலுள்ள இட ஒதுக்கீடு சட்டவிதிகள் பாடப்பிரிவு வாரியாக பள்ளிக் கல்வித்துறை வெளியீடு.


மேற்கண்ட அட்டவணையில் தெரிவித்துள்ளவாறு மாணவர் சேர்க்கையின்போது பொதுப்பிரிவினர்க்கான 31 % இடத்திற்கான பட்டியல் முதலில் தயாரிக்கப்பட வேண்டும். இதில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே முன்னுரிமை வழங்கிடவும் , பொதுப்பிரிவினர் , ஆதி திராவிடர் , பழங்குடியினர் , பிற்படுத்தப்பட்ட பிரிவினர் என்ற எவ்வித பாகுபாடின்றி தயாரித்திடவும் அறிவுறுத்தப்படுகிறது . அதன் பின்னர் அந்தந்த பிரிவுக்கான பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும்.

மாநிலத்தின் அதிகாரவரம்பிற்குள் செயல்படும் அனைத்துவகை பள்ளிகளிலும் ( சிறுபான்மை கல்வி நிலையங்கள் நீங்கலாக ) பாடப் பிரிவு வாரியாக ( Group - wise ) மேற்கூறப்பட்ட விகிதத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு மேல்நிலைக்கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. அனைத்துப் பள்ளிகளுக்கும் இச்செயல்முறை ஆணையினை அனுப்பி ஒப்பம் பெற்று தங்கள் கோப்பில் வைக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள் . மேலும் , மேற்கூறியவாறு அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment