JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Tuesday, September 22, 2020

பள்ளி திறப்பது தொடர்பான கல்வி அமைச்சரின் பேட்டி.

இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியது:-

தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை.

நாட்டிலேயே கல்வியில் வியக்கத்தக்க மாநிலமாக தமிழகம் உள்ளது.

நீட் தேர்வில் தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 174 கேள்விகள் இடம் பெற்றிருந்தன.

முழுமையான கல்விக்கட்டணம் வசூலித்த தனியார் பள்ளிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

2.5 லட்சம் தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்த நிலையில் செப்டம்பர் இறுதி வரை சேர்க்கை நடக்கும்.

15 இடங்களில் தொடக்க பள்ளிகளும், 10 இடங்களில் உயர்நிலைப்பள்ளிகளும் தொடங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment