Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, October 7, 2020

புதிய கல்வி கொள்கைக் குறித்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர் இருமொழிக் கொள்கை தான் வேண்டுமென தெரிவித்துள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

புதிய கல்வி கொள்கைக் குறித்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர் இருமொழிக் கொள்கை தான் வேண்டுமென தெரிவித்துள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

உயர்கல்வித்துறை சார்பில் புதியக் கல்விக்கொள்கை தொடர்பாக, கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரிடம் கருத்து கேட்பு கூட்டம் இணைய வழியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், தமிழக அரசு அறிவித்துள்ள இருமொழிக் கொள்கை தான் வேண்டுமென்று தெரிவித்தாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அதே போன்று, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர நுழைத்தேர்வு வேண்டாம் என்றும் பெற்றோர் மற்றும் மாணவர்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டதாக உயர்கல்வித்துறை குறிப்பிட்டுள்ளது. இந்த கருத்துகளின் அடிப்படையில், தலைமைச் செயலாளர் சண்முகம், மத்திய கல்வித்துறைக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment