முருங்கை மரத்தின் அனைத்து பாகங்களுமே அபரிமிதமான பயன்களை அள்ளி வழங்குகின்றன. அதிலும் முருங்கைக்காயில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
இதனை தினமும் சூப் வைத்து குடிப்பதால் ஏராளமான நன்மைகள் உடலில் சேர்கின்றன. இதனால் உடல் வலிமை பெறுவதோடு ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.
முருங்கைக்காய் சூப் தொடர்ந்து குடித்து வருவதால் நம் உடலில் உள்ள சிறுநீரக பிரச்சனைகள் சீராகி ஆரோக்கியத்தை தக்க வைக்கிறது.
மேலும் வயிற்றில் உள்ள புண்களை குணமாக்கி செரிமானப் பிரச்சனைகளை சீராக்குகிறது. மூட்டு வலி பிரச்சனை இருப்பவர்கள் தினமும் முருங்கைக்காய் சூப் குடிக்கலாம்.
மூளையின் செயல்திறன்களை அதிகரிக்கச் செய்கிறது. முருங்கைக்காய் சூப் குடிப்பதால் வாய்ப்புண்கள் குணமாகும். உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
No comments:
Post a Comment