Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, November 16, 2020

மேஷ ராசி: குருப்பெயர்ச்சி பலன்கள் 2020

சூரியனை உச்சமாக கொண்ட மேஷ ராசி அன்பர்களே!

நீங்கள் எதிலும் மதியை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர்கள். செவ்வாயே உங்கள் ஆட்சி நாயகன். எனவே இந்த பூமி மீது உங்களுக்கு அளவற்ற பாசம் இருக்கும். இதுவரை குருபகவான் 9ஆம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்து கொண்டிருந்தார். குறிப்பாக எடுத்தகாரியத்தில் பல்வேறு வெற்றிகளை தந்திருப்பார். இப்போது குருபகவான் 10ஆம் இடத்திற்கு அடியெடுத்து வைத்திருக்கிறார். இது சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. முன்பு போல் அவரால் நல்ல பலன்களைஅள்ளிதர முடியாது. பொதுவாக 10-ஆம் இடத்தில் இருக்கும் குருபகவான் பொருள் நஷ்டத்தையும், மனசஞ்சலத்தையும் ஏற்படுத்துவார். 

குருசாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 5-ம் இடத்துப்பார்வை மிகசிறப்பாக இருக்கிறது. அதன்மூலம் எந்த இடையூறையும் உடைத்தெறிந்து முன்னேற்றம்காணலாம். மேலும்அவர் 2021 ஏப்ரல் 4-ந் தேதி முதல் 2021 செப்டம்பர் 14-ஆம் தேதி வரை அதிசாரம் பெற்றுகும் ராசியில் இருக்கிறார். இந்தகாலக்கட்டத்தில்அவரால் நன்மை கிடைக்கும். 

குருவால் பொருளாதார வளம் மேம்படும். உத்தியோகம் சிறப்படையும். புதிய பதவி கிடைக்கும். மேலும் அவரின் 7 மற்றும் 9-ம் இடத்து பார்வைகள் மூலமும் நற்பலனை தருவார். 2021 நவம்பர் 14ஆம் தேதி அன்று முழுபெயர்ச்சி அடைந்து 11-ம்இடமானகும்பராசிக்கு மாறுகிறார். இதுசிறப்பானஇடம்.

அதன்பிறகுகுரு2022 ஏப்ரல் 14-ந்தேதிஅன்று பெயர்ச்சி அடைந்து 12-ம் இடமான மீனராசிக்குமாறுகிறார். இதுசிறப்பானஇடம்இல்லை. அவரால் தொல்லைகள் உருவாகும். வீண்அலைச்சல்ஏற்படும்.

மற்ற கிரகங்களின் நிலை

சனிபகவான் தனுசுராசியில் இருப்பதால் உங்கள் முயற்சிகளில் சிறுசிறு தடைகள் வரலாம், எதிரிகளின் இடையூறு தலைதூக்கும், பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். ஆனால் அவர் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது மூன்று பார்வைகளும் உங்களுக்கு சிறப்பாக உள்ளது. அதன்மூலம் அவர் பொருளாதாரவளத்தையும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் கொடுப்பார்.உங்கள் ஆற்றல் மேம்படும். பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். அவர் 2020 டிசம்பர் 26-ந்தேதி அன்று மகரராசிக்குபெயர்ச்சிஅடைகிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்லமுடியாது. ஆனால் பலன்கள்மாறுபடும். சனியால் இதுவரை இருந்துவந்ததடைகள் அகலும். ஆனால் தொழிலில் சிறுசிறு பின்னடைவுகள் ஏற்படலாம். உங்கள் செல்வாக்கு முன்புபோல்இல்லாமல்போகலாம்.

ராகு இப்போது 2-ஆம் இடமான ரிஷபத்திற்கு இருக்கிறார். இது சிறப்பான இடம்இல்லை. இங்கு அவர் குடும்பத்தில் சிற்சிலபிரச்சினையையும் தூரதேசபயணத்தையும் ஏற்படுத்துவார். பொருட்களை களவு கொடுக்க நேரிடும். பொருளாதார இழப்பு ஏற்படும். கேது இப்போது 8-ம் இடமான விருச்சிகத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அங்கு அவரால் விபத்து பயம், செயல் முடக்கம், உடல்நலக்குறைவு முதலியன வரலாம்.

இரண்டு கிரகங்களுமே சாதகமற்ற இடத்தில் இருக்கிறார்கள் என்று கவலைகொள்ள தேவை இல்லை காரணம் ராகுவின் பின்னோக்கிய 4-ம் இடத்துப்பார்வை உங்கள்ராசிக்கு 11 -இடமான கும்பத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும்.

இனி விரிவானபலனை காணலாம்.

உங்கள் முயற்சியில் தடைகள் வந்தாலும் குரு, சனி பார்வைகளால் அதை எளிதில் முறியடிப்பீர்கள். செலவு அதிகரிக்கும். சகோதரிகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். அவர்களால் பொருள் சேரும். பெரியோர்களின் ஆலோசனையை அவ்வப்போது கேட்பது நல்லது. மதிப்பு, மரியாதை சீராகவே இருக்கும். கணவன்-மனைவி இடையே பொறுமையும், விட்டுக்கொடுக்கும் தன்மையும் தேவை. 2021 ஏப்ரல் 4-ந்தேதி முதல்2021 செப்டம்பர் 14-ந் தேதிவரை திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவன்-மனைவி இடையே இருந்து அன்பும் பாசமும் கிடைக்கும். பணவரவு இருக்கும். சொந்தபந்தங்கள் உங்களுக் குஉதவிகரமாக இருப்பர்.

உத்தியோகம்- வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. உங்கள் பொறுப்புகளை தட்டிகழிக்காமல் செய்யவும். பளுஅதிகரிக்கும். அலைச்சல் ஏற்படும். அதேநேரம் உழைப்புக்கு தகுந்த வருவாய் கிடைக்கும். குருவின்5- ம் இடத்துப்பார்வையால் பதவி உயர்வு கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு ஓரளவு கிடைக்கும்.

2021 ஏப்ரல் 4-ந்தேதி முதல் 2021 செப்டம்பர் 14-ந்தேதி வரை உத்தியோகம் பார்ப்பவர்கள் திருப்திகரமான சூழ்நிலையில் இருப்பர். கோரிக்கைகள் நிறைவேறும். சகபெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். வியாபாரிகளுக்கு சனி பொருளாதார இழப்பை ஏற்படுத்துவார். திருட்டுகளவு போன்றவை இடர்பாடுகள் வரவாய்ப்பு உண்டு. சிலர்தரம்தாழ்ந்த பெண்ணின் சேர்க்கையால் பணஇழப்பை சந்திக்க நேரலாம். கவனம் தேவை. வியாபாரம் விஷயமாக வெளியூர் பயணம் சென்று வருவர்.

யாரிடமும் கவனமுடன்பழகவும். இருப்பினும் குருவின் பார்வையால் பகைவர்கள் வகையில்இ ருந்துவந்த இடையூறு, அனுகூலமற்ற போக்கு முதலியன மறையும். சிறுதொழில் செய்பவர்கள்தொழிலை விரிவுபடுத்துவர். உங்கள் திறைமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். பெண்களை பங்குதாரர்களாக கொண்ட வியாபாரம் தழைத்து 2021 ஏப்ரல்4-ந்தேதிமுதல் 2021 செப்டம்பர் 14-ந்தேதி வரை தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.

புதியதொழில் தொடங்க நினைப்பவர்கள் தங்கள் எண்ணத்தை நிறைவேற்றவும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தத்திற்காக அதிக முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும். பொது நல சேவகர்கள் நல்லவசதியுடன் இருப்பர். எதிர்பார்த்தபதவிகிடைக்கும்.

அரசியல்வாதிகள் சுமாரான நிலையில் இருப்பர். பணப்புழக்கத்தில் எந்தகுறையும் இருக்காது. வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். புதிய வழக்குகளில் சிக்கவேண்டாம். வக்கீல்கள் புதிய வழக்குகள் எடுத்து நடத்தும் போது சற்று கவனம் தேவை. 2021 ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் 2021 செப்டம்பர் 14-ஆம் தேதி வரை கலைஞர்களுக்கு முயற்சிகளில் இருந்ததடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் மறையும். எழுத்தாளர்கள்புகழும், பெருமையும் கிடைக்க பெறுவர்.

மாணவர்கள்

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்கவும். ஆசிரியர்களின்அறிவுரையை கேட்டு நடக்கவும். இருப்பினும் குருவின் பார்வையால் சிறப்பான பலனை காணலாம். நல்ல மதிப்பெண்பெறலாம். மேற்படிப்பு தொடரும். விரும்பியபாடம் கிடைக்கும். 2021 ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் 2021 செப்டம்பர்14-ஆம் தேதிவரை நல்ல வளர்ச்சி காண்பர். ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும்.

விவசாயிகள்

விவசாயிகளுக்கு மஞ்சள், கரும்பு, எள், பனை போன்ற பயிர்வ கைகளில் நல்ல மகசூல் கிடைக்கும். கூலிவேலைகள் செய்பவர்கள் மனநிம்மதியுடன் காணப்படுவர். கோழி, ஆடுவளர்ப்பில் எதிர்பார்த்த பலனைபெற இயலாது. பசு வளர்ப்பவர்கள் அதில் அதிக அக்கறை காட்டவேண்டியதிருக்கும்.

புதியசொத்து முயற்சியின் பேரில் வாங்கலாம். 2021 ஏப்ரல் 4-ந்தேதிமுதல் 2021 செப்டம்பர் 14-ந்தேதி வரை விளைச்சல் நன்றாக இருக்கும். கால்நடைவளர்ப்பில் வருவாய் கிடைக்கும் .கிழங்கு வகைகள் நிலக்கடலை, மற்றும் பழவகைகள்,காய்கறிவகைகள் போன்றவை மூலம் அதிக வருமானத்தை காணலாம்.

பெண்கள்

பெண்கள் குடும்பத்தேவைக்காக அதிகமாக பாடுபடவேண்டியதிருக்கும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. அக்கம் பக்கத்தினர் வகையில்தொல்லைகள் இடர்பாடுகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலைப்பளு இருக்கும்.

வேலையில் கவனம் தேவை. சிலர் மன உழைச்சலுடன் காணப்படுவர். இருப்பினும் குருவின் பார்வையால் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். தோழிகள் உதவிகரமாக இருப்பர். 2021 ஏப்ரல்4-ந்தேதிமுதல் 2021 செப்டம்பர் 14-ந் தேதி வரை முன்னேறத்துடன் காணப்படுவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கணவனின்அன்பு கிடைக்கும். குடும்பத்தில் முக்கிய அங்கமாகதிகழ்வீர்கள்.

வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனைபெறுவர். சுயதொழில் செய்து வரும் பெண்களுக்கு லாபத்துக்கு குறை இருக்காது. உடல்நலம் சுதந்திரமற்றநிலையில்இருப்பீர்கள். உஷ்ண, பித்தம், மயக்கம், சளிபோன்ற உபாதைகள் வரலாம்.

பரிகாரம்:

சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். துர்க்கை அம்மைனை வணங்கி வாருங்கள்.விதவை மூதாட்டிக்கு இயன்ற உதவி செய்யுங்கள். வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பத்திரகாளி அம்மனைவழிபடுங்கள். குருபகவானுக்கு மஞ்சள்நிறபூக்களால் அர்ச்சனைசெய்யுங்கள்.

கணித்தவர்: காழியூர் நாராயணன்

No comments:

Post a Comment