Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, November 16, 2020

துலாம் ராசி : குருப் பெயர்ச்சி பலன்கள் 2020

சிறந்த நண்பர்களையும், நல்ல உறவினர்களையும் கொண்ட துலாம் ராசி நண்பர்களே!

நீதி நேர்மையுடன் நீங்கள் நடக்க விரும்புவீர்கள். மனதில் சரி என்று பட்டதை மறைக்காமல் வெளியிடும் மனப்பக்குவம் கொண்டவர்கள். குருபகவான் இதுவரை 3-ம் இடத்தில் இருந்தார்.அது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல.

உங்கள் முயற்சியில் அவ்வப்போது தடைகள் ஏற்பட்டு இருக்கும். சிலர் வேலையை இழக்கும் நிலைகூட ஏற்பட்டு இருக்கலாம். இந்த நிலையில் குரு 4-ம் இடமான தனுசு ராசிக்கு செல்கிறார். இந்த இடமும் அவ்வளவு சிறப்பானது என்று சொல்ல முடியாது. ஆனால் கடந்தகால பலன்களில் இருந்து இது மாறுபடும். பொதுவாக குருபகவான் 4-ல் இருக்கும் போது மனஉளச்சலையும், உறவினர்வகையில் வீண்பகையையும் உருவாக்குவார் என்பது ஜோதிட வாக்கு. ஆனால் அதைகண்டு கவலைகொள்ள வேண்டாம். 

மேலும் இங்கு குருபகவான் நீண்டநாட்கள் நீடிக்க மாட்டார். அவர் 2021 ஏப்ரல் 4-ந் தேதி முதல் 2021 செப்டம்பர் 14-ந் தேதி வரை அதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம். 2021 நவம்பர் 13-ந் தேதி அன்று முழுபெயர்ச்சி அடைந்து 5-ம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார். அவர் குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார்.

பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தைபாக்கியம் கிடைக்கும். மேலும் இந்த காலகட்டத்தில் அவரது 5,7-ம் இடத்து பார்வைகள் சிறப்பாக உள்ளன. அதன் மூலமும் நன்மைகள் கிடைக்கும். அதன்பிறகு 2022ஏப்ரல் 14-ந் தேதி அன்று பெயர்ச்சி அடைந்து 6-ம் இடமான மீன ராசிக்கு மாறுகிறார்.

இது சிறப்பான இடம் இல்லை.அவரால் உடல்நலம் பாதிக்கப்படும். மனதில் தளர்ச்சி ஏற்படும். மற்றகிரகங்களின் நிலை சனிபகவான் தற்போது 3-ம் இடத்தில் இருக்கிறார். இது உன்னத நிலை.அவர் உங்கள் முயற்சிகள் அனைத்தையும் வெற்றி அடைய செய்வார்.பொருளாதார வளத்தை மேம்படுத்துவார். தொழிலில் சிறந்தோங்க செய்வார். இந்த நிலையில் சனிபகவான் 2020 டிசம்பர் 26-ந் தேதி அன்று மகரராசியில் அடியெடுத்து வைக்கிறார். இது அவ்வளவு சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. பொதுவாக 4-ம் இடத்தில் இருக்கும் போது சனிபகவான் குடும்பத்தில் வீண்விரோதத்தை கொடுப்பார். 

ஊர்விட்டுஊர் செல்லும் நிலை உருவாகும். குடும்பத்தை பிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம். சனி சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 3-ம் இடத்துப்பார்வை மிகச்சிறப்பான இடத்தில் விழுகிறது.
இது மிக சாதகமான நிலை. இப்போது ராகு 8-ம் இடமான ரிஷபத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அவர் உறவினர்கள் வகையில் சிற்சில பிரச்சினைகளை உருவாக்கலாம். உங்கள் முயற்சிகளில் தடைகளையும் உருவாக்கலாம். கேது 2-ம் இடமான விருச்சிகத்தில் இருக்கிறார்.

இது சிறப்பான இடம் அல்ல. அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. அரசின் வகையில் சிக்கல் வரலாம். வீட்டில் பொருட்கள் திருட்டு போகவும் வாய்ப்பு உண்டு.கேது சாதகமற்ற இடத்தில் இருக்கிறார் என்று கவலை கொள்ள தேவைஇல்லை காரணம் அவரது பின்னோக்கிய 4-ம் இடத்துப் -பார்வை உங்கள் ராசிக்கு 11-இடமான சிம்மத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். இனி விரிவான பலனை காணலாம்.

வீட்டினுள்சிற்சில பிரச்சினை வரலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். கவனம் தேவை.ஆனால் சனிபகவான் நற்பலனை தருவார். இதனால் பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். உங்கள் ஆற்றல் மேம்படும். 2021 ஏப்ரல் 4-ந் தேதி முதல் 2021 செப்டம்பர் 14-ந் தேதி வரை குரு நற்பலனை தருவார். இதனால் குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார். பண ப் புழக்கத்தை அதிகரிக்க ù சய்வ ôர் . திருமணம் ú ப ôன் ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார்.

தம்பதியினரிடையே அன்பு பெருகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.வீட்டுக்கு தேவையான சகலவசதிகள் கிடைக்கும். பெண்களால் மேன்மை கிடைக்கும். உத்தியோகம் சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். அதிக உழைப்பை சிந்தவேண்டியது இருக்கும். உழைப்புக்கு ஏற்ற மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்.மேல அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது.அரசு ஊழியர்கள் வேலையில் கவனமாக இருக்கவும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். 2021 ஏப்ரல் 4-ந் தேதிமுதல் 2021 செப்டம்பர் 14-ந் தேதி வரை குரு உயர்வை தருவார். உத்தியோகம் சிறப்படையும்.

உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். இதுவரை இருந்து வந்த பின்தங்கிய நிலை இனி இருக்காது. வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவர். கோரிக்கைகள் நிறைவேறும்.மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். முக்கிய கோரிக்கைகளை வைக்கலாம் சக பெண்ஊழியர்கள் மிகவும்ஆதரவுடன்இருப்பர்.
பொருள்சேரும். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். சக பெண்ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.வேலையின்றி இருக்கும் படித்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.

வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும் வெளியூர் வாசம் நிகழும். அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிது. அதோடு சிலர் அரசின் மூலம் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். எனவே உங்கள் வரவு-செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். பொருள் களவு ஏற்பட வாய்ப்பு உண்டு. பகைவர் வகையில் தொல்லை வரும். வாடிக்கையாளர்களிடம் அனுசரணையாக நடந்து அவர்கள் ஆதரவை தக்க வைத்துக் கொள்ளவும்.

எது எப்படியானாலும் குருவின் பலத்தால் அவை அனைத்தையும் 2021 ஏப்ரல் 4-ந் தேதி முதல் 2021 செப்டம்பர் 14-ந் தேதி வரை முறிடிக்கும் வல்லமை கிடைக்கும். அச்சகம்,பத்திரிகை, பப்ளிகேசன் ,கணினித் தொழில், தரகு, ஆன்மிகம் தொடர்பாக தொழில்,கட்டுமான ஆலோசகர் போன்ற தொழில் நல்லவளர்ச்சியை அடையும். பணவிரயம், பணம் திருட்டு போன்றவை தடுக்கப்படும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள்அதிக லாபத்தை பெறுவர். புதிய வியாபாரம் தொடங்குவதோ, அதிகமுதலீடு போடுவதோ இப்போது வேண்டாம்.

அதைவிட இருப்பதை சிறப்பாக நடத்துவதே சிறப்பு. பொதுவாக பணமுதலீட்டை விட அறிவு முதலீடே முக்கியம். ஆம் உங்கள் அறிவை பயன்படுத்தி முன்னேறலாம். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்லமுன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் லாபத்தை தரும். கலைஞர்களுக்குபுகழ்,பாராட்டு வந்து சேரும்.

பொதுநலசேவகர்கள், அரசியல்வாதிகள் பிரதிபலனை எதிர்பாராது உழைக்க வேண்டியதிருக்கும் மாணவர்கள் சிரத்தை எடுத்து படித்தால்தான் பலன் கிடைக்கும். 2021ஏப்ரல் 4-ந் தேதி முதல் 2021 செப்டம்பர் 14-ந் தேதி வரை விரும்பிய பாடங்களை பெறுவர்.

ஆசிரியர்களின் அறிவுரை பயன் உள்ளதாக இருக்கும். வெற்றி பெறுவர்.காலர்ஷிப் போன்றவை கிடைக்கும். விவசாயிகள்: அதிகமாக உழைக்க வேண்டும். மானாவாரி பயிர்களில் சிறப்பானமகசூல் கிடைக்கும். கோழி, ஆடு வளர்ப்பில் எதிர்பார்த்த பலனை பெற இயலாது.டிசம்பர்26-ந் தேதிக்கு பிறகு வழக்கு,விவகாரங்கள் சுமாராக இருக்கும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம். பெண்கள் பொதுவாக எந்த பிரச்சினையிலும் விட்டுக்கொடுத்து போகவும். உறவினர்கள் வகையில் மனக்கசப்பும், கருத்துவேறுபாடும் ஏற்படும். வேலைக்கு செல்லும் பெண்கள் இடமாற்றத்தை காணலாம். வேலையில் அக்கறையுடன் இருக்கவும். 2021ஏப்ரல் 4-ந் தேதி முதல் 2021 செப்டம்பர் 14-ந் தேதி வரை குடும்பத்தில் சிறப்பு பெறுவர்.

குதூகலம் அதிகரிக்கும் நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். புதிய பதவி தேடி வரும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். உடல் நலம் சிறுசிறு உபாதைகள் வரலாம்.

பரிகாரம்- வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் நிற மலர் மாலை அணிவித்து வழிபாடு நடத்துங்கள் தினமும் வீட்டில் விளக்கு எற்றி வழிபடுங்கள் நாக தேவதையை வணங்கி வாருங்கள்.ராகுவுக்கு உளுந்து படைத்து மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள். 2020 டிசம்பர் 26-ந் தேதினிசக்கிழமை சனிபகவானுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யுங்கள். சனிக்கிழமை ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள்

கணித்தவர்: காழியூர் நாராயணன்

No comments:

Post a Comment