38வது மாவட்டமாக நாளை உதயமாகிறது மயிலாடுதுறை

தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.

நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்க கோரிக்கை எழுந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்க தமிழக அரசு ஆணை வெளியிட்டது.

இந்நிலையில், தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார்.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories