Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, January 25, 2021

10ம் வகுப்பு தேர்ச்சி ரிசர்வ் வங்கியில் வேலை

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கி(Reserve Bank)யில் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. தகுதி உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வங்கிகளில் முதன்மையானதாகவும், அதிக அதிகாரம் படைத்ததாகவும் கருதப்படும் இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 241 பாதுகாவலர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி – SECURITY GUARDS

காலியிடங்கள் – 241

சம்பளம் – மாதம் ரூ. 10,940

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு

25 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினர் 28ம், எஸ்சி/எஸ்.டி பிரிவினர் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை

ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் உடல்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?

www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக் கட்டணம்

ரூ.50 கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

கடைசி நாள் – 12.2.2021

No comments:

Post a Comment