Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, January 1, 2021

அனைத்து ஆசிரியர்களுக்கும் ஐனவரி 18 முதல் Jolly Phonics ஆன்லைனில் பயிற்சி நடத்துவதற்கான வழிகாட்டுதல்!

ஈரோடு மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் வாயிலாக 2018-19ம் கல்வியாண்டில் Jolly Phonics பயிற்சி தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து அரசு மற்றும் அரசுதவி பெறும் பள்ளிகளின் அனைத்து ஆசிரியர்களுக்கும் (SGT, BT and PG) Phonetic பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டு மாவட்ட அளவில் பயிற்சி கட்டகம் தயாரிக்கப்பட்டது. Covid - 19 கால சூழ்நிலை மற்றும் சமூக இடைவெளி ஆகியவற்றை கருத்தில் கொண்டு இப்பயிற்சியினை காணொளி வாயிலாக வழங்கவும், முதற்கட்டமாக மாவட்ட அளவிலான பயிற்சி 04.01.2021 முதல் 8 நாட்களுக்கு அரை நாள் வீதம் (09.30 AM - 01.00PM) வரை காணொளி வாயிலாக பயிற்சி அளிக்கவும், இதனைத் தொடர்ந்து வட்டார அளவில் அனைத்து ஆசிரியர்களுக்கும் 18.01.2021 முதல் காணொளி வாயிலாக பயிற்சி அளிக்கவும் திட்டமிடபட்டுள்ளது.

மேற்காண் பயிற்சியினை சிறந்த முறையில் அளிக்கவும், உரிய நேரத்தில் ஆசிரியர்களை பயிற்சியில் பங்கேற்கவும் அறிவுறுத்துமாறு அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பயிற்சி 9.45AM - 11:15AM வரை முதல் பாடவேளை 11.15AM - 11.30AM வரை இடைவேளை 11.30 AM – 1.00PM வரை இரண்டாவது பாட வேளைகளாக நடைபெறும் பயிற்சிக்கான Link மூலமாக 9.30 ( மக்கு பயிற்சியில் இகணையவும், இணைந்தவுடன் தங்களது Mic mute செய்திடவும் தங்களது வருகையை Google Meet ல் உள்ள Chat Boxல் பதிவிட வேண்டும் பயிற்சியின்போது வழங்கப்படும் கருத்துக்களை குறிப்பெடுத்து ஒவ்வொரு நாள் இறுதியில் கேட்கப்படும் கேள்விற்கு பதிலளிக்க வேண்டும். பயிற்சியின் இடையே கேட்கப்படும் கேள்விகளுக்கு Chat Box வழியாக பதியளிக்கலாம்.

பயிற்சி சார்ந்து கருத்தாளரிடம் கேள்விகள் ஏதேனும் கேட்கவேண்டும்போது மட்டுமே Mic Unmute செய்து கேட்க வேண்டும் இரண்டாவது வேளை இறுதியில் Google fom வழியாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பங்கேற்பாளர்கள் அனைவரும் பதிலளிக்க வேண்டும். பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்கள் Google Meeti Present பட்டனை அழுத்தக்கூடாது என்பதனையும் Google Meet எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதனை குறுவர்கமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆசிரியர்களுக்கு தெளிவுபடுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

* ஒன்றியங்களில் உள்ள ஆசிரியர்களின் எண்னாரிக்கைக்கு ஏற்பட கருத்தாளர்கள் தேர்வு செய்ய வேண்டும். கருத்தாளர்கள் மற்றும் கணினி இயக்க தெரிந்த ஒரு நபருடன் இணைந்து 90 - 95 ஆசிரியர்களுக்கு ஒரு Batch ஆக பயிற்சி அளிக்கலாம் ஒன்றியத்திலுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கேற்ப Batch எண்ணிக்கை வட்டார அளவில் தேர்வு செய்து ஆசிரியர்களுக்கு பயிற்சியினை 18.01.2021 தொடங்கி - 28.02.2021 க்குள் பயிற்சியளித்து முடிக்கும் வகையில் அட்டவணை தயார் செய்து பயிற்சி அளிக்க வேண்டும்.

மாநில திட்ட இயக்ககத்தின் வாயிலாக நடைபெறும் பயிற்சிகள் பாதிக்காவண்ணம் வட்டார அளவிலான பயிற்சி அட்டவணை தயார் செய்து பயிற்சி நடத்தப்படவேண்டும். இணைய வசதி இல்லாத ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கேற்கும் வகையில் வட்டார வளமையத்தில் நேரடியாக சமூக இடைவெளியுடன் பங்கேற்க செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் ஆசிரியர்களின் பங்கேற்பினை உறுதி செய்யவும், ஆசிரியர்களின் வருகை பதிவினை கண்காணித்து அறிக்கை அளிக்கவும் அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்கள் பயிற்சி சார்ந்த கட்டசுத்தை நகல் எடுத்து பயிற்சியின் போது கட்டாயம் பயன்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் பயிற்சி நடைபெறுவதை இமையவாயி(Link) கானாத்திட மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் பயிற்சியினை எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் நடத்திடவும், பயிற்சியில் பங்கேற்றோர் விவரம், ஆசிரியர்களின் பின்னூட்ட அறிக்கை மற்றும் புகைப்பட ஆவணங்களுடன் அறிக்கை அளிக்க அனைத்து வட்டார வள மைய பொறுப்பு ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment