இரத்த சர்க்கரை அளவை உடல் ஒழுங்குபடுத்த முடியாத ஒரு நிலை நீரிழிவாகும். இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவும் ஹார்மோன் இன்சுலின் ஆகும். இது கணையத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. உடல் போதுமான அளவு இன்சுலின் உற்பத்தியை செய்யாமல் இருக்கும்போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
இது டைப் I, டைப் II நீரிழிவு என இருவகைப்படுகிறது. இதில் டைப் II நீரிழிவு பொதுவாக அதிகமானோருக்கு காணப்படுகிறது. இது பெரும்பாலும் வயதானவர்களை அதிகம் பாதிக்கிறது. ஆனால் மோசமான உணவுப் பழக்கம், உடல் பருமன் காரணமாக இளம் வயதினரும் பாதிக்கப்படுகின்றனர்.
நம் நாட்டில் சுமார் 70 மில்லியன் மக்கள் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா உலகின் நீரிழிவு நோயின் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. டைப் 2 நீரிழிவு நோயை உங்கள் வாழ்க்கை மற்றும் உணவு முறையை மாற்றுவதன் மூலம் கட்டுக்குள் வைக்கலாம். டைப் 2 நீரிழிவு நோயாளிகள் பச்சை ஜூஸ் ஒரு சிறந்த தேர்வாகும். இந்த பச்சை ஜூஸ் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த காலை பானமாகும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் சர்க்கரை அதிகமாக இருப்பதால் பழச்சாறுகள் அருந்துவதை தவிர்க்கிறார்கள். ஆனால் இந்த பச்சை ஜூஸ் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் பெரிதும் பயனளிக்கும். இந்த பச்சை ஜூஸ் தயாரிக்கும் விதம் குறித்து நாம் இங்கு தெரிந்துகொள்வோம்.,
தேவையான பொருட்கள் :
கேரட் - 1பச்சை ஆப்பிள் - 1/2
வெள்ளரி - 1
எலுமிச்சை - 1
முட்டைக்கோஸ் - 1/4
செலரி - 1
கீரை - 1/2 கட்டு
பீட்ரூட் - 1/2
பூண்டு - 3 பல்
தக்காளி - 1
இஞ்சி - 1 துண்டு
பாகற்காய் - 1
செய்முறை :
கேரட், ஆப்பிள், வெள்ளரி, முட்டைகோஸ், தக்காளி, செலரி, பாகற்காயை, கீரை சிறு சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும். இதனுடன் பூண்டு, இஞ்சி சேர்த்து ,மீண்டும் அரைத்து வடிகட்டி சாறு எடுத்து கொள்ளவும். இதில் எலுமிச்சை சாறு சேர்த்து அருந்தவும்.
பச்சை ஜூஸ் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் :
* கேரட்டில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. உயர் இரத்த அழுத்தத்துடன் தொடர்புடைய சோடியம் அளவை சமநிலைப்படுத்த இது மிகவும் அவசியம்.
* இந்த ஜூஸ் வைட்டமின் ஏ, சி, கே மற்றும் இரும்புச்சத்து ஆகியவற்றின் சிறந்த மூலமாகும்.
* உடலில் இரத்த அளவை ஒழுங்குபடுத்தி, நீரிழிவு நோயாளிகள் பார்வைக் கோளாறால் பாதிக்கப்படுவதைத் தடுக்க உதவுகிறது.
* இது உங்கள் உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் அனைத்து வகையான நீரிழிவு நோய்க்கான ஆபத்தையும் குறைக்கிறது.
* பகீரையில் கால்சியம், பீட்டா கரோடின், வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளது. இவை உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகள் புரிகின்றன, மேலும் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.
* இந்த ஜூஸில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால் இது பல்வேறு நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கிறது.
* செலெரி, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் கொண்டது, இது இதயத்திற்கு நன்மைகளைத் தருகிறது. கடைசியாக, நீங்கள் இதில் க்ரீன் ஆப்பிளை சேர்க்கலாம். இதில் இருக்கும் மாலிக் அமிலத்தின் காரணாமாக இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும் இரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது.
* மேலும் இந்த ஜூஸ் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
No comments:
Post a Comment