Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, January 31, 2021

பிப்ரவரி 8ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறப்பு.!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனான் பரவலைத் தடுக்க கடந்த ஆண்டு மார்ச் 24-ஆம் தேதி முதல் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. நோய் பரவல் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்து உள்ளது. இருப்பினும் தினமும் 500 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் ஊரடங்கு இம்மாதம் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே ஊரடங்கு நீட்டிப்பு, நீட்டிக்கலாமா.? அல்லது தளர்வு அறிவிக்கலாமா.? என்பது குறித்தும், கொரோனா பரவலை முற்றிலும் தடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முதலமைச்சர் 29-ஆம் தேதி ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், தமிழகத்தில் வரும் பிப்ரவரி 29 தேதிவரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், பிப்ரவரி 8ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகள் /பல்கலைக்கழகங்களில் இளநிலை /முதுநிலைப் படிப்பிற்கான அனைத்து வகுப்புகளும் தொடங்க அனுமதி வழங்கியும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment