உடலில் இன்சுலினானது இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகளில் இந்த β-cells குறைந்து விடுவதால் சர்க்கரை அதிகமாக இரத்த்தில் காணப்படுகிறது. முக்குரட்டை கீரையை உணவில் 4 வாரங்கள் சேர்த்தால் β-cells எண்ணிக்கையை குறையாமல் காக்கிறது. இதனால் அவர்களில் உடல் மேலும் பாதிப்படையாது. சர்க்கரை அளவும் கணிசமாக குறைகிறது.
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோர் இக்கீரையின் இலைச்சாற்றைப் பருகினால் மன அழுத்தம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் அட்ரினல் சுரப்பியின் செயல்பாட்டை சீராக்கி மனப்பதட்டத்தைக் குறைக்கிறது. இதன் இலைச்சாறு வைரஸ் மற்றும் பாக்டீரியத் தொற்றுக்கு எதிராக செயல்படும் ஆற்றல் பெற்றுள்ளது. உடலில் ஏற்படும் கட்டிகள் உள்ளுறுப்புகளில் ஏற்படும் இரணத்தை ஆற்றுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment