Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, January 20, 2021

வறட்டு இருமல் மற்றும் தொண்டை கட்டு நீக்கும் கற்பூரவள்ளி

வறட்டு இருமல், இருமலால் ஏற்பட்ட தொண்டை கட்டு பிரச்சனை நீங்க, இதன் இலை சாருகளில் சில சொட்டுகளை தொண்டையில் படும்படி அருந்திவர இருமல், தொண்டைக்கட்டு நீங்கிவிடும்.

நுண்கிருமி தொற்றால் நம் உடலின் தோல் பகுதிகளில் சிலருக்கு படை, அரிப்பு, சொறி போன்ற நோய்கள் இருக்கும். இதன் தீர்வான கற்பூரவள்ளி இலையினை பறித்து நன்றாக கசக்கி அதன் சாற்றை தோலில் பாதிப்பு அடைந்த இடத்தில் தடவிவர தோல் சம்மந்த அரிப்பு பிரச்னைகள் விரைவில் குணமாகும்.

ஒரு சிலர் தேவையற்ற விஷயங்களுக்கு அதிக பயம் மற்றும் கவலை கொள்வார்கள். இதனால் அவர்களுக்கு மனதில் அமைதியின்மையும், படபடப்பு தன்மையும் ஏற்படும். கற்பூரவள்ளி இலை செடிகளின் வாசனையை அடிக்கடி சுவாசிப்பவர்களுக்கு இலையில் இருக்கக்கூடிய ரசாயன பொருட்கள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி மன அழுத்தம், படபடப்பு தன்மையை போக்கும்.

No comments:

Post a Comment