Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, February 5, 2021

உயிரை பறிக்கும் எமனாக மாறும் ஆப்பிள்!

தினமும் ஒரு ஆப்பிள் பழத்தை உட்கொண்டால், மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்பது நாம் அனைவரும் அறிந்த பழமொழி. ஏனெனில், ஆப்பிள் பழத்தில், நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் தேவையான அளவில் உள்ளன. ஆப்பிள் பழத்தை நாம் அதிகளவு உட்கொள்ளும் பட்சத்தில், அதுவே நமது உயிரைப் பறிக்கும் எமனாகவும் மாறி விடுகிறது என்பதை நாம் ஒருநாளும் மறந்துவிடக் கூடாது.

ஒரு நல்ல உடற்திறனுள்ள மனிதர், நாள் ஒன்றுக்கு சராசரியாக 2 ஆப்பிள்களை உட்கொள்ளலாம். ஒருவேளை அதற்கு மேல் அவர் உட்கொள்ளும் பட்சத்தில், அவருக்கு உடனடியாக சில பக்கவிளைவுகள் ஏற்படுவதை அவர் கண்கூடாக காணலாம்.

நமது உடல் சிறந்து செயல்பட, நார்ச்சத்து மிக முக்கியமான தேவையாகும். ஆனால், இதே நார்ச்சத்து, நமக்கு மிக அதிகளவில் கிடைக்கும்பட்சத்தில், அது செரிமானக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.

ஒருவரின் வயது மற்றும் அவர் சார்ந்த பாலினத்திற்கு ஏற்ப அவருக்கு நாள் ஒன்றுக்கு 20 முதல் 40 கிராம்கள் அளவிற்கு நார்ச்சத்து தேவைப்படுகிறது.

இதன் அளவு 70 கிராம்களாக அதிகரித்தால், செரிமானக் கோளாறு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. நாள் ஒன்றுக்கு 15 ஆப்பிள்களை சாப்பிட்டால் மட்டுமே, நமக்கு 70 கிராம்கள் நார்ச்சத்து கிடைக்கும்.

நமது உடலுக்கு தேவையான நார்ச்சத்து, ஆப்பிள் பழங்கள் மட்டுமல்லாது, பீன்ஸ், முழு கோதுமை, காய்கறிகளின் மூலமும் நமக்கு கிடைக்கிறது.

இதன்காரணமாக, நாம் நாள் ஒன்றுக்கு 4 ஆப்பிள்களை உட்கொண்டாலே, 70 கிராம்களுக்கு மேல் நார்ச்சத்து நமக்கு கிடைத்துவிடுகின்றன.

ஆப்பிள் பழத்தில் அதிகளவு கார்போஹைட்ரேட்கள் உள்ளன. உடற்பயிற்சி செய்பவர்கள் இதன்காரணமாகவே, ஆப்பிள் பழத்தை விரும்பி உண்கின்றனர்.
அதிக ஆப்பிள் சாப்பிடும் பட்சத்தில், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதன்காரணமாக, பல்வேறு உபாதைகள் வரலாம்.

ஆப்பிள் பழங்களில் அதிகளவில் கார்போஹைட்ரேட் சத்து இருப்பதால், இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, மேலும் பல்வேறு வகையான உடல் உபாதைகளுக்கும் வழிவகுத்து விடுகிறது.

அதிகப்படியான சர்க்கரை சத்து, உடல் எடையை அதிகரிக்க செய்துவிடுகிறது. உடல் எடை அதிகரித்த பின்பு, அதை குறைக்க பலர் படாதபாட படுவதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.

ஆப்பிளில் உள்ள அதிகப்படியான சர்க்கரை, நமது உடலில் கொழுப்புகளாக தங்கி விடுகிறது. இந்த அதிகப்படியான கொழுப்பு, நமது உடல் எடையை பெருமளவிற்கு அதிகரித்து விடுகிறது. இந்த கொழுப்பை குறைக்க நாம் அதிகம் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டி உள்ளது.

ஆப்பிள் பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு குடலில் எரிச்சல் நோய்க்குறி ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக இரைப்பையியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆப்பிள் பழங்களில் உள்ள அதிகப்படியான சர்க்கரை, செரிமான மண்டலத்தை பாதித்து ஜீரணத்திறனை தடை செய்கின்றன. அடிக்கடி வீக்கம், வாயுக்கோளாறுகள், செரிமான அசவுகரியங்கள் உள்ளவர்கள், ஆப்பிள் பழத்தை போதுமானவரை தவிர்ப்பது நல்லது.

No comments:

Post a Comment