தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஏப். 18) வெளியிட்ட செய்தி வெளியீடு:
"வரும் 20-ம் தேதி அதிகாலை முதல் மறு உத்தரவு வரும் வரை கீழ்க்கண்ட உத்தரவுகள் அமலில் இருக்கும்.
* பிளஸ் 2 மாணவர்களுக்கான தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மூலம் நடத்தப்படும் பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. இருப்பினும், பிளஸ் 2 மாணவர்களுக்காக தற்போது நடைபெற்று வரும் செயல்முறைத் தேர்வு மட்டும் ஏற்கெனவே திட்டமிட்டபடி நடத்தப்படும்.
* கல்லூரி / பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலேயே இணைய வழியாக வகுப்புகளை எடுக்க வேண்டும்.
* அரசு மற்றும் தனியார் கல்லூரி / பல்கலைக்கழக தேர்வுகள் இணைய வழியாக மட்டுமே நடத்தப்பட வேண்டும்.
* கல்வி சார்ந்த பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், இணைய வழியாக மட்டுமே பயிற்சி வழங்க அனுமதிக்கப்படுகிறது".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
WORKING TEACHERS SPECIAL TET STUDY MATERIAL
Sunday, April 18, 2021
Home
தேர்வு
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தள்ளிவைப்பு; செயல்முறை தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்: தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தள்ளிவைப்பு; செயல்முறை தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்: தமிழக அரசு அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)





No comments:
Post a Comment