JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Sunday, April 18, 2021

பயிற்சி புத்தகத்தை வழங்குவதில் குழப்பம் ஆசிரியர்கள் தவிப்பு

பயிற்சி புத்தகத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் குழப்பம் நீடிப்பதால் ஆசிரியர்கள் தவித்து வருகின்றன தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன இதனால் ஆன்லைன் கல்வி தொலைக்காட்சி வழியாக கற்பிக்கப்பட்டது பத்தாம்' வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் சில மாதங்கள் பள்ளிகள் செயல்பட்டன .

மேலும் மற்ற வகுப்புகளில் தேர்வு எழுதி தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது இப்படி அறிவித்தாலும் மாணவர்களின் கற்றல் திறனை அறிய ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பயிற்சி புத்தகங்களை வழங்கி சோதிக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இதற்காக சிவகங்கை மாவட்ட அரசு பள்ளிகளுக்கு பயிற்சி புத்தகங்கள் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன .

அந்த புத்தகங்கள் வழங்குவது குறித்து முறையான வழிகாட்டுதல் வழங்கவில்லை இதனால் புத்தகங்களை மாணவர்களிடம் வழங்குவதா பெற்றோர்களிடமும் வழங்குவதா அல்லது

இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறுகையில் பயிற்சி புத்தகத்தை தேதி அறிவிப்புக்கு முன்பே வழங்காமல் தாமதமாக வழங்கினர். இனி புத்தகத்தை பார்த்து மாணவர்கள் பெற்றோரிடம் ஆர்வம் இருக்காது பயிற்சி புத்தகங்களை வாங்கி சென்றாலும் கற்றல் திறனை அதிகரிப்பதிலும் சிரமம் உள்ளது ஒரு சில மாவட்டங்களில் பயிற்சி புத்தகங்களை பெற்றோரிடமும் வழங்கும் போது அவற்றை வாங்க மாட்டோம் என பிரச்சனை செய்து வருகின்றனர் என்றனர்.

No comments:

Post a Comment